வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நித்யானந்தத்தின் சத்யாகிரகம்

உறுதி மிக்க நூறு இளைஞ்ர்களை தாருங்கள் நான் இந்த உலகத்தை
மாற்றி காட்டுகிறேன் - விவேகானந்தர்.
விவேகானந்தர் கூறிய அந்த இளைஞர்கள் அப்போது அவருக்கு
கிடைக்கவில்லை. இப்போது
அவர் இருந்தால் அந்த நூறு பேருக்கு பதிலாக இந்த ஒரு
இளைஞ்னை தேர்ந்தெடுத்திருப்பார்.
அவர் நித்யானந்தம்.

கோவையின் நெரிசலில் இருந்து விலகி அவிநாசி சாலையில்
இருபது கி. மீ பயணத்தில் இருக்கிறது மயிலம் பட்டி.
தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியை கடந்து சென்றால் ஊருக்கு
ஒதுக்குபுறமாக உள்ளது அந்த இடம்.
சாலை விரிவாக்கம் மற்றும் நகரமயமாதலின் விளைவு மரங்கள்
வெட்டி வேரோடு சாய்க்கப்படுவதுமிகச்சாதாரணமாக இருக்கிறது.
அது இவருக்கு மிக ரணமாக இருக்கிறது.
அன்று இருபது வயதை எட்டாத அந்த இளைஞ்னுக்கு ஏற்பட்ட தாக்கம்
இன்று முன்னாள் குடியரசுத்தலைவர்
உயர்திரு. டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் கனவுதிட்டமான
"பசுமை பஞ்சாயத்து" எனும் அற்புதமான திட்டத்தின் முன்னோடியாக
விளங்குகிறார் நித்யானந்தம்.


நமது "வளரும் தமிழகம்" இதழுக்காக சந்திக்க சென்றபோது
மயிலம்பட்டியின் ஊரின் துவக்கத்திலேயே
நம்மை வரவேற்று அழைத்துச்சென்றார். குடியிருப்புகளை தாண்டி
இருந்தது அந்த இடம்.
ஐ நா விலும் அமெரிக்காவிலும் போய் பேசியது இவராஎன
வியக்குமளவிற்கு எளிமையாக இருந்தார்.
" மழையில்ல ஊரே வறண்டு போச்சுன்னு பொலம்பாம இந்த
மண்ணுக்கு நம்மால முடிஞ்சத செஞ்சா
நாமளும் நல்லாருப்போம் இந்த ஊரும் நல்லாருக்கும்" என
கொங்கு தமிழில் வெள்ளந்தியாக பேசுகிறார்.
இந்திய இளைஞ்ர்களின் பிரதிநிதியாக ஐ நாவும் அமெரிக்காவும்
இவரை அழைத்து அங்கு பேச சொல்லும் வரை
இவரின் சாதனைகள் வெளி உலகிற்கு பெரிய அளவில்
தெரியவில்லை. 25 வருடங்களாக சத்தமில்லாமல் இவர்
செய்த சேவைகள் உள்ளூர் மக்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் இவரின்
நலன் விரும்பிகளால் அயல் நாடுகளுக்கு தெரிந்தது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்து பத்தாவது வரை படித்த இவர் LMW
நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தாலும் சமூக சேவை
ஆர்வம் மட்டும் தீயாக அடி மனதில் எரிந்து கொண்டிருந்தது.
நண்பர்கள் சிலர் உதவியுடன் " தியானா பொது சேவை மையம்"
என்ற என்ற பெயரில் 1988ல் துவக்கி எய்ட்ஸ் விழிப்புணர்வு
பிரச்சாரத்தை கோவையின் சுற்று வட்டார கிராமங்களில் துவங்கினார்.
மனைவியின் நகைகளை அடகு வைத்தும் விற்றும் போதாக்குறைக்கு
கடன் வாங்கியும் இதை நடத்தினார்.

இவரின் தீவிர ஈடுபாட்டை அறிந்த கோவை மாவட்ட ஆட்சியாளர்
திரு. முருகானந்தம் அவர்கள் பாராட்டி கௌரவித்ததுடன் 
சான்றிதழும் வழங்கினார். இன்னும் அதிக உத்வேகத்துடன் தொடர்ந்த
சமூகப்பணியால் அதிகமான விடுப்பு எடுக்க நேர்ந்தது.
இவர் பணியாற்றிய LMW நிர்வாகம் இவருக்கு மெமோ
கொடுததோடல்லாமல்  பணி நீக்கம் செய்தது. ஆனாலும் தளராமல்
LMW சேர்மேன் திரு. சஞ்சய்  ஜெயவர்ததன வேலுவை  சந்தித்து
தன்னுடைய சமூக சேவை ஆர்வத்தை ஆவணங்களுடன் விளக்கினார்.
அதையெல்லாம்  பார்த்த அவர் " உன் சமூக சேவையை
தொடர்ந்து செய். உன் சம்பளம் வீடு தேடி வரும் " என்று கூறியதுடன்
இன்று வரை ஆதரவளித்து வருகிறார். இதை நம்மிடம்
சொல்லும்போதே அவரின் கண்கள் பனிக்கிறது.
பசுமை பஞ்சாயத்து எனும் உன்னதமான திட்டத்தை துவங்கிவைத்த
உயர்திரு. டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் கோவை வந்த
போது இவரின் சேவையை பாராட்டியதுடன்  இவருக்கு உறுதுணையாக
இருந்து வரும் மனைவியயும் தந்தையின் பணிகளை
உடனுக்குடன் ஆவணப்படுத்தி அவரின் வேலைப்பழுவை குறைக்கும்
மகன்கள் இரட்டையர்களான ஜெகதீஷ்-ஜெகதீப் இருவரையும்
வெகுவாக பாராட்டினார்.
13 முறை சிறந்த இளைஞ்ருக்கான  விருதுகளை பல்வேறு
மாவட்ட ஆட்சிதலைவர்களிடம் பெற்றுள்ள நித்யானந்தம் சிறு வயது
முதலே மரம் வளர்ப்பதிலும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்திலும்
இன்று வரை முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார். 2013 டிசம்பரில்
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கன்யாகுமரியில்  பிரச்சாரத்தில்
ஈடுப்டப்போவதாக தெரிவித்தார்.
தன்னலமின்றி இவர் ஈடுபாட்டுடன் செய்யும் சேவைக்காக 2012ம் வருடம்
வாஷிங்டன்ல் நடந்த உலக எய்ட்ஸ் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக
இவரை பேச அழைத்தது INTERNATIONAL AIDS COMMITTEE.
அதன் பிறகு 2013ல் ஐ. நா சபையில் நடந்த உலக இளைஞர் மாநாட்டில்
 இந்தியாவின் பிரதிநிதியாக இவரை அழைத்தது.
அதன் பிறகே இந்தியாவில் எய்ட்ஸ் மற்றும் சுற்றுசூழல் குறித்த
 150க்கும் மேற்பட்ட மானாடுகளில் இவரை பேச அழைத்து
கௌரவப்படுத்தியது.
மேலும் சிறுதுளி, ராக் மற்றும் விஜயலட்சுமி அறக்கட்டளை போன்ற
தண்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கோவையில்
உள்ள குளங்களை தூர்வாரும் பணியில் தன்னை
ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
330 ஏக்கர் பரப்பலவிலான உக்கடம் பெரியகுளம் தற்போது உயர்த்தப்பட்ட
கரையுடன் ஆங்காங்கே சிறுசிறு தீவுகளுடன் பல்வேறு மரங்களுடன்
ரம்மியமாக காட்சியளிக்கிறது.
சமூக சேவையில் ஈடுபடுபவர்களை ஏதோ லாப நோக்கொடு
செயல்படுவதாக கருதும் சிலரால் இளைஞ்ர்கள்  இதில் ஈடுபடவே
பயப்படுகிறார்கள் என்று வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். மேலும்
" உலகத்தில பெரிய பணக்காரரா இருந்த பில் கேட்ஸ்ம் உயர்ந்த
பதவிலிருந்த பில் கிளிண்டனும் மன நிம்மதி தர்றது சமூக
சேவைதாண்னு சொல்லி இப்போ சமூக சேவை பண்றாங்க.
நெறய பேரு நேரமில்லைன்னு சொல்றாங்க " நாம ரோட்டுல
போகும்போது ஒரு ஆம்புலன்ஸ் போச்சுன்னா அந்த உயிர்
நல்லாயிருக்கணும்னு மனசார நெனச்சாலே போதும் நாம
தூய்மையாயிருவோம். நீங்க போய் அவங்களுக்கு உதவி
பண்ணலேன்னாலும் பரவாயில்ல. அந்த எண்ணம் இருந்தாலே
போதுங்க" என்றவர் மேலும் இளைஞ்ர்கள் பொது வாழ்க்கைக்கு
வரவே பயப்படராங்க. என் தெருவுல ரோடு போட்டா நான் போய்
பாக்கணும் மணல் சரியா இருக்கா ஜல்லி சரியா இருக்கான்னு
நானே போய் கேட்டா ஓ இதுல இவனுக்கு கமிஷன் இருக்குமோன்னு
சுத்தி இருக்கறவங்க பேசுவாங்க. நமக்கென் வம்புன்னு ஆர்வம்
இருக்கறவனும் ஒதுங்கி போயிருவான். அப்ப யாருதாங்க கேக்கறது.
இது நம்ம பணம்ங்க. இத பத்தி நம்ம ஜனங்களுக்கு இன்னும்
விழிப்புணர்வு வரணுங்க" என்று கோபமும் வருத்தமுமாக சொன்னவர்
மேலும் " ஏன் மரம் வேக்கறதுல ஆர்வம்னு நெறய பேர் கேக்கறாங்க.
20 வருசத்துக்கு முன்னால தண்ணிய காசு குடுத்து வாங்கணும்னு
சொன்னா சிரிப்பாங்க. ஆனா இப்போ?
பெருநகரங்களில ஆக்சிஜன் பார்லர் தொரக்கறாங்க.
ஒரு மணி நேரத்துக்கு அம்பது ரூபாயாம்.
நம்ம தலைமுறை பரவால்லிங்க அடுத்த தலைமுறை?
ஐ. நா. சபையோட அறிக்கையில தண்ணீர் மக்களோட உரிமைன்னு
இருக்கு. ஆனா நம்ம நாட்டில அத தேவைன்னு மாத்திட்டாங்க .
தேவைன்னா என்ன? தேவைப்படரவங்க காசு குடுத்து வாங்கிக்கலாம்.
உரிமைன்னா கண்டிப்பா அரசாங்கம் கொடுத்தாகணும்.
நாம எல்லாத்துக்கும் அரசாங்கத்தயே குத்தம் சொல்லாம நம்மால
முடிஞ்சத பண்ணுவோங்க. நம்ம முன்னோர்கள் நமக்கு நல்ல உலகத்த
தந்திட்டு போயிருக்காங்க. அட நாம சீரழிக்காமாயாவது அடுத்த
தலைமுறைக்கு கொடுப்போம். இயற்க்கை வளங்களை அழிக்க நமக்கு
எந்த உரிமையும் கெடயாதுங்க.  இத வேற யாராவது வந்து
மாத்துவாங்கன்னு நாம எப்படிங்க சும்மா இருக்க முடியும்.
என்று அனல் தெறிக்க பேசியவர் சற்று ஆசுவாசமாக
" பசுமை பஞ்சாயத்து மூலமா ஊராட்சில இருக்கற பொறம்போக்கு
நெலத்த அந்த ஊராட்சி மன்ற தலைவர் மூலமா குடுத்தா
மூணு மாசத்தில நெலத்த சரிப்படுத்தி குழியெடுத்து மரக்கண்னு நட்டு,
சொட்டு நீர் பாசனம் அமைத்து அந்த மரம் சுயமா தன்னை
பாத்துக்கரவரைக்கும் கூட இருந்துட்டு அடுத்த ஊராட்சிக்கு போறோம்
என்று முடித்தார்.
25 வருடங்களுக்கு  முன் ஒரு சிறு தீப்பொறியாய் இருந்த நித்யானந்தம்
சஞ்சய் ஜெயவர்ததன வேலுவால் தீப்பிழம்பாய் மாறி உலக
நாடுகளில் உரை நிகழ்த்தி பல்லாயிரக்கணக்கான இளைஞ்ர்களுக்கு
அவரின் பேச்சினால் அந்த தீயை பரவ வைத்த அவருடன்
பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பாரதியின்  'அக்கினி குஞ்சொன்று
கண்டேன்" எனும் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது.
அவரின் பேச்சில் தெரிந்த சமூக அக்கறை நிச்சயம் பல
இளைஞ்ர்களுக்கு ஊக்கமாக இருக்கும். இந்தியாவை மாற்றும்
சக்தி தென்னிந்தியாவில் இருந்து புறப்படும் என்ற விவேகானந்தரின்
வாக்கு உண்மையாகும் .
"உலகப் போர்களின் எச்சம்தான் இந்த உரங்கள்.
முதல் உலகப் போரில் எட்டு லட்சம் சிறைக்கைதிகளைக் கொல்ல அம்மோனியா
 நச்சுப்புகை பயன்படுத்தப்பட்டது.உலகப்போர் முடிந்ததும் அதுவே பூச்சிக்கொல்லி
மருந்தாகப் புது அவதாரம் எடுத்தது.இரண்டாம் உலகப்போர் முடிந்ததில் வெடிகுண்டுக்காரர்களின்
சந்தை சரிந்தது. வெடிகுண்டுத் தயாரிப்பில் மிச்சப்பட்ட அம்மோனியா - சூப்பர் பாஸ்பேட் போன்ற வெடி
 உப்புக்களை எங்கு கொட்டி  தொலைப்பது? அல்லது இந்த கழிவுகளை எப்படிச் சந்தைப்படுத்துவது?
வியாபார மூளைகளில் கந்தகம் எரிந்தது. எந்த உலோக  உப்புக்கள் மனிதச்சந்தையை
 இழந்து விட்டனவோ அதே உலோக உப்புக்களுக்கு ஒரு மண் சந்தை தயாரிக்கப்பட்டது.
அவை ரசாயன உரங்களாய் ரசவாதம் பெற்றன. மனிதனைக் கொன்ற  மிச்சம், மண்ணைக் கொன்றது.
 இது தான் பூச்சி மருந்தும் உரமும் பிறந்த கதை. மூலத்தை இழந்து விட்டான் இந்திய விவசாயி;
மூளைச்சலவை செய்யப்பட்டான் உலக விவசாயி. சாணமும், எருவும், சாம்பலும் தழையும் குழைத்துக்
குழைத்துக் கொட்டிச் செய்யப்பட்ட விவசாயம் சோதனைக் குழாய்களின் கைகளுக்குப் போய்விட்டது.
மலடாகிப் போனது  நிலம்
நஞ்சாகிப் போனது உணவு - கவிப்பேரரசு வைரமுத்து.

வைரமுத்து அவர்களின் இந்த வைர வரிகள் வாசிப்பவர்களின் ரசிப்புத் தன்மையை தாண்டி ஒரு சமூக
மாற்றத்திற்கான அவரின் உணர்வாக,  அறைகூவலாக  தெரிகிறது.
மூன்றாம் உலகப்போர் என்ற அவருடைய  படைப்பை ஏதோ ஒரு கவிதை நூல் என்று தான் நினைத்திருந்தேன்
நண்பர் ஜெயக்குமார் அதை என்னிடம் கொடுக்கும் வரை. அலுவலகத்தில் ஒரு மாலை வேளையில்
முன்னுரையை படிக்க துவங்கியது மட்டும் தான் நினைவில் இருந்தது. ஒரே மூச்சில் படித்து முடித்து
புத்தகத்தை கீழே வைத்தபோது, இதுவரை நான்  உட்கொண்ட உணவை பற்றி முதன் முதலாக அடி மனதில்
ஒரு பயம் தோன்றியது. இந்த உணவைத்தான் என் மனைவி, மக்கள், குடும்பம் கிராமம், ஊர், ஏன் இந்த உலகமே
உண்டுகொண்டிருக்கிறது. எத்தனையோ நோய் பாதிப்புகளை உள்வாங்கிக்கொண்டு தான் இந்த சமூகம் இன்னமும்
நோய்களின் வலியோடு இயங்கிக்கொண்டிருக்கிறதா? இதற்கே இந்த அளவு முன்னேற்றம்  என்றால் ரசாயனக்
கலப்பில்லாத இயற்கை உணவுகளை உட்கொண்டிருந்தால் உரமேறிய உடலோடும், உன்னதமான மனதோடும்
இன்னும் இந்த உலகத்தை எவ்வளவு முன்னேற்றியிருப்போம்?
இந்த புத்தகத்தை படிக்கும்போது ஒரு சிறு கிராமத்தில் துவங்கி, வேளாண்மை பல்கலை கழகத்தின் அனைத்து
பேராசிரியர்களையும் ஒரே சமயத்தில் சந்தித்து உரையாடியதுபோல் இருந்தது.
ஏராளமான மனித உயிர்களை பலிகொண்ட இரண்டு உலகப்போர்களை விடவும், ஆயுதங்களின்றி
தற்போது இந்த மண்ணை சத்தமில்லாமல் கொன்று வரும் ரசாயன உரங்களின் தீமைகளையும் அதனால்
விவசாயிக்கு ஏற்படும் அதீதமான பாதிப்புகளையும் ஒரு கதையாகக் கூறும் இந்த படைப்பு, ஒவ்வொரு
விவசாயியும், ஏன் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டும். நான் உணர்ந்த அந்த பாதிப்பை அனைவரும் உணர்ந்து,
இயற்கை விவசாயத்தில் மட்டும் ஈடுபட்டு மண் செழிக்கவும், மனிதம் தழைக்கவும் பாடுபடவேண்டும்.

இலாபம் கொழிக்கும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறையில் கால் பதித்து வெற்றிகரமாக
அதை நடத்தி அடுக்கு மாடிக்கட்டிடங்களை வானுயரக்கட்டி 200 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் 
ஞானகுரு என்ற இளைஞர் தன்னுடைய சொந்த பண்ணைக்கு உரம் வாங்க எதேச்சையாக
சென்றபோதுதான் அவருக்கு அந்த உண்மை உறைத்திருக்கிறது.
தன்  பண்ணை வீட்டுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் பணியாளர்கள் ' தென்னைல  காய் புடிக்கல,
தக்காளி வெளச்சல் கம்மியா இருக்கு , பூச்சி தாக்குதல் என்று சொல்வதை அப்போது பெரிதாக
 எடுத்துக்கொள்ளவில்லை. தற்செயலாக  உரம் வாங்கிய  கணக்கை எடுத்துப் பார்த்த போது அதிர்ந்து போனார்.
விளைவித்த பொருட்களின் சந்தை விலையை விட உரத்திற்காக செலவிட்ட தொகை மட்டும் சம்பந்தமே
இல்லாமல் எகிறியிருந்தது. அதன்  பிறகு நேரம் கிடைக்கும் போது விவசாயிகளிடம் இதைப்பற்றி அடிக்கடி
விவாதித்தார். ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. சரியான விழிப்புணர்வு இல்லாத விவசாயிகள் ரசாயன
உரங்களையும் காலாவதியான போலி மருந்துகளையும்  உபயோகித்து மண்ணையும் நாசமாக்கி மகசூலும்
வராமல் மேலும் மேலும் நஷ்டபட்டுக்கொண்டிருந்தனர்.
இதற்கான தீர்வைக்காண பல விஞ்ஞானிகளையும் நிபுணர்களையும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக
 பேராசிரியர்களையும் அணுகினார். நீண்டகால முயற்சியில் அதற்க்கான தீர்வையும் கண்டார்.
" மண்ண  இன்னிக்கி நஞ்சாக்கிட்டோம் எப்படின்னா, மண்ணுல இல்லாத ஒண்ண  செயற்கையா உரம் என்ற
 பேர்ல உருவாக்கி மண்ணுல போட்டோம். மண்ணு அத  ஏத்துக்கிட்டாலும் தன்னோட தன்மைய
இழந்ததோடல்லாமல் பக்க விளைவா பலவிதமான நோய்களையும் உருவாக்கிருச்சு. பொன்னு வெளையற
 இந்த பூமியிலேயே நெறைய சத்துக்கள் இருக்கு. அத  தனியா பிரிச்சு தேவையான ஊட்டத்தை 
ஏற்ற இயற்கையான  பொருட்களை கலந்து மண்ணுல போட்டா மண்ணும் நல்லா ஆரோக்யமா இருக்கும்.
அதுல வெளயறதும் சத்து  மிக்கதா இருக்கும். இது தான் சார் கான்செப்ட்" என துவங்கினார்.
பொறந்த கொழந்தை மூணு கிலோ, முப்பது வருஷத்தில 60 கிலோ ஆகுதுன்னா எப்படிங்க. இந்த மண்ணுல
வெளஞ்சத ஒடம்பு ஏத்துக்கிட்டு இந்த மாற்றம் நிகழுது. மனுஷனுக்கும் மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு
இருக்குன்னு சொல்றதவிட மண்ணும் மனுஷனும் ஒண்ணுதான்னு சொல்லணும். மண்ணை நாசமாக்கறதும்
தன்னையே நாசமாக்கறதும் ஒண்ணு  தான். விழிப்புணர்வு இல்லாத ஒரே காரணத்தினால
  மட்டும் தான் இது நடக்குது. மண்ணுல இருக்கிற தங்கத்தை பிரிச்சு அதை நகையா மாத்தற வரை அது
மண்ணு தான். அதே மாதிரி இயற்கையா கிடைக்கற வளங்களை ஆராய்ச்சி செய்து நவீன தொழில் நுட்பத்தை
 பயன்படுத்தி 100% இயற்கை உரங்களாக மாற்றி விக்கறோம்" என்றார்.

இவரால் துவங்கப்பட்ட வெற்றிவேல் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் என்ற நிறுவனங்களின் 
வெற்றிவேல் ஹவுசிங் புரமோட்டர்ஸ் ப்ரைவேட் லிமிடெட்ன் மூலமாக பாம் 'ன்' மெடோஸ் என்ற
ப்ராஜெக்டில் 704 அடுக்குமாடி குடியிருப்புகளை தற்போது கட்டி வருகிறார்.

ஸ்ரீ அலகுமலை முருகன் டிரஸ்ட்  என்ற பெயரில் சமூக சேவையும் ஆன்மீக பணிகள் மட்டுமல்லாது பல்வேறு
பணிகளையும் செய்து வருகிறார்.
ஸ்ரீ அலகுமலை வித்யாலயா மெட்ரிக்குலெஷன் பள்ளியில்  தரமான கல்வியை கிராமப்புற மாணவர்களுக்கு
கல்வி சேவையாக 
மிக மிக குறைந்த கட்டணத்தில் அளித்து வருகிறார்.
ஆன்மீகத்தில் கொண்டுள்ள அதீத ஈடுபாடு காரணமாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் குடும்ப ட்ரஸ்ட் மூலமாக
பல்வேறு ஆன்மீகப் பணிகளையும் செய்து வருவதுடன் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ சொர்ண  ஆகர்ஷண பைரவர்
மற்றும்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்கும் உலகத்திலேயே முதல் கோவில் அமைக்கும் பணியிலும் தன்னை ஈடு படுத்திக்
கொண்டுள்ளார். 

தற்போது தொடங்கப்பட்டுள்ள ஸ்ரீ தான்யலட்சுமி பயோ சயின்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம்
கோவையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் ஈடுபடும் அவருடைய குழுவினரால் உருவாக்கப்பட்ட
தனித்துவம் மிக்க இயற்கை உரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகமும், தேயிலை ஆராய்ச்சி கழகமும் (உபாஸி)
2000 முதல் 2003 வரை இதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து பயிர்களின் மீது அதை சோதித்து
நிரூபணம் ஆன பிறகு விவசாயிகளுக்கும் பரிந்துரை செய்கின்றன.

ஸ்ரீ தான்யலட்சுமி பயோ சயின்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெருமை மிக்கதாக 
இவர் கூறுவது 'ஹ்யூமிக் ராயல்'  என்னும்  மண்ணுக்கு புத்துயிர் ஊட்டும் தயாரிப்பை தான்.
இதன் சிறப்பம்சமாக இவர் கூறுவது
# வேர்களின் செயலாற்றலை அதிகரிக்கிறது.
# சத்துக்களை உறிஞ்சும் திறனை அதிகப்படுத்துகிறது.
# பச்சையம் உருவாக்கத்தை தூண்டுகிறது.
# பயிர் விளைச்சலை 20% முதல் 40% வரை அதிகரிக்கிறது.
# விதை முளைப்புதிறனை மேம்படுத்துகிறது.
# பயிர்களின் இயற்கை நோய் தடுப்பாற்றலை அதிகப்படுத்துகிறது.
# பயிர்களின் தரமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
# மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது.
# நீர் மற்றும் உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது.
# மண்ணின் கார அமிலத்தன்மையை சமன் செய்கிறது என அடுக்கிக்கொண்டே சென்றவரை நாம் இடை மறித்து
"எல்லாரும் சொல்றதைதானே நீங்களும் சொல்றீங்க" என்றதும் சற்று நிதானித்தவர்
 " பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு அடர்ந்த காடுகள்  மற்றும் விலங்குகள்
சிதைவடைந்து மக்கி போனதுதான் இப்போ பழுப்பு நிலக்கரி (லிக்னைட் ) இதிலிருந்து  கிடைப்பதுதான் பொட்டாசியம்
 ஹ்யுமேட்  என்ற இத்தொழில்நுட்பம்  இந்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகத்தால் (இந்திய அரசு நிறுவனம் )
 கண்டறியப்பட்டதாகும்.
 இதே போல் லியோநார்டைட் என்ற இயற்கை வளத்தில்  இருந்தும் நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி 
 இத்தகைய திரவ உரங்களை தயாரிக்கிறோம். 100% எல்லா நுண்ணூட்ட சத்துக்களையும் கொண்ட இயற்கையான
பொட்டாசியம் ஹியுமேட்டில், ஹ்யுமிக் அமிலம் (வீரியம் 55% - 60% திண்ம நிலையில்)
பொட்டாசியம் (7%-9%) மற்றும் அனைத்து சத்துக்களும் பயிர் வளர்ச்சிக்கு
முக்கிய பங்காற்றுவதால் 20 லிருந்து 40 சதவீதம் வரை (காய் கறிகளில் 100% வரை) கூடுதல் மகசூல்
கிடைக்கும். பறவை விலங்குகளின்  கழிவிலிருந்து தயாரிக்கும் இயற்கை உரம்தான் மண்ணில மக்கிபோய்
ஹ்யுமிக் அமிலமாக மாறுகிறது. இதைவிட வீரியமானதுதான் ஹியுமிக் ராயலாகும். ஒரு லிட்டர்
ஹியுமிக் ராயல் 4டன் தொழு உரத்துக்கு சமம். இதைப்போல வீரியமானதுதான் லியோநார்டைட்
இதுவும் லிக்னைட் மாதிரிதான். ஆனால் லிக்னைட்டைவிட அதிக வருஷம் மண்ணுல மக்கினது.
இது அமெரிக்கா ஆஸ்த்ரேலியா கனடாவின் சில இடங்களில் மட்டும் கிடைக்கும் என்றவரிடம்
சைனா தயாரிப்புகளை வேறு மாநிலங்களில் தடை செய்த விஷயத்தை கேட்டோம்.
(பார்க்க பெட்டி செய்தி ) எந்த ஒரு நல்ல விஷயம் அறிமுகமானாலும் அதுக்கு உடனே போலிகள்
 வருவதை தடுக்கமுடியாது ஆனால் அதுக்காக நல்ல விஷயத்தை மக்கள் கிட்ட கொண்டு சேர்க்காம
 இருக்க முடியுமா. இது என்னோட வியாபாரமா இருந்தாலும் இதை உபயோகித்த விவசாயிகள் மகசூல்
அதிகமாவதையும், நல்ல இலாபம் கிடைப்பதையும் சொல்லும்போது, கிடைக்கற சந்தோஷம் ரொம்ப அதிகம்
என்றவர் இன்னிக்கி வரை அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஹ்யூமிக் தான் அங்கீகரீக்கப்பட்ட உரமா இருக்கு.
அவங்க தொடங்கி வெச்ச ரசாயன உரத்த அவங்களே உபயோகிக்கறது இல்ல. நாம தான் இன்னும் கெட்டியா
பிடிச்சிட்டிருக்கோம்.
கெட்ட விஷயம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தேடி போறாங்க நல்ல விஷயம் பக்கத்தில் இருந்தாலும்
கண்டுக்க மாட்டோம். விலை மலிவா கிடைக்குதுன்னு கண்டதையும் மண்ணுல போட்டா என்ன விதமான
பாதிப்புகள் வரும்னு விவசாயிகள் தெளிவா உணர்ந்திட்டாங்க. இதை உபயோகித்த விவசாயிகள், நல்ல
மகசூல் எடுப்பதையும் மண்ணோட  தன்மையில மகத்தான மாற்றம் ஏற்பட்டதையும் சொல்லும்போது ரொம்ப
நிறைவா இருக்கு. அந்த உத்வேகம், இந்தியாவில இருக்கிற ரசாயனம் படிஞ்ச மண்ணை முழுசா மாத்தி உயிர்ப்பு
மிக்க ஆர்கானிக் இந்தியாவா மாத்தணும் என்கிற இலட்சியத்தை நோக்கி எங்க குழு நேரம் காலம் பாக்காம
வேல செய்யுறோம் என்றார். இத்தனை நேரம் பேசியும்
நாம் எந்த ரியாக்ஷனும் காட்டாததால் வெள்ளானைபட்டி வரை போலாமா என்று கேட்டார். கோவையில்
இருந்து 20கீ.மீ தொலைவில் உள்ள இடம் என்பதால் மறுப்பு சொல்லாமல் சென்றோம். 30 நிமிட  பயணத்திற்கு
பின் சண்முக சுந்தரம் என்ற பாபுவின் வீட்டில் வண்டியை  நிறுத்தினார். பி .எஸ். சி பட்டதாரியான பாபுவின்
தாயாரும் மனைவியும் நம்மை தோட்டத்திற்கு அழைத்து சென்று காண்பித்தார்கள்.
அப்போது சரியாக பாபுவும் வந்து சேர்ந்தார்.
அப்பா செய்த விவசாயம் என்னை பெருசா அதில ஈடுபட
வைக்கலை. நான் தனியா என்னோட வியாபாரத்தை மட்டும் கவனிச்சிட்டிருந்தேன் ஒரு கட்டதுக்கப்பறம்
அவரால் அத தொடர முடியல. ஆள் பற்றாக்குறை,  உரத்தட்டுப்பாடு , விலையேற்றம், கட்டுபடியாகாத
விளைபொருள் விலை என பல காரணம்  என்று பேசீட்டு இருக்கும் போதுதான் மனைவி கேட்டாங்க.
நம்ம டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்ல விக்கற காய்கறி விலைக்கும் , நம்ம விளைவித்து கொடுக்கற விலைக்கும்
ஏன் இவ்வளவு வித்தியாசம் என்று அப்பத்தான் யோசிச்சேன். விவசாயம் இலாபகரமான தொழில் இல்லேன்னா,
இதை விளைய வெக்கற விவசாயி எப்படி இதை தொடர்ந்து செய்ய முடியும்? நாம ஏன் இதில இறங்க கூடாதுன்னு
நெனச்சேன். உடனடியா முடிவு செய்து நேந்திரன் வாழை 2 1/2  ஏக்கர், மஞ்சள்  1 1/4 ஏக்கரில் வெச்சேன்.
வெச்ச நேரம் பாருங்க. 20 நாள் தண்ணி பாய்ச்ச முடியல. அதுக்கப்புறம் தண்ணி பாய்ச்சினேன்.
ஆனால் வாழை ஒரு மாசத்துக்கு அப்புறம் வளர்ச்சியே இல்லை. அப்புறம்தான் சொன்னாங்க தொழு உரம்போட்ட
 பிறகுதான் வாழை வெக்கணும்னு. என்னடா வம்பாபோச்சே என்று இடிந்துபோய் உட்கார்த்தபோதுதான் ஒருத்தர்
சொன்னாரு இதையெல்லாம் புடுங்கி எறிஞ்சிட்டு வேற ஏதாவது போடுன்னாரு. இத்தனை செலவு பண்ணி
 முட்டுவளி போட்டு எப்படிங்க சும்மா விட முடியும். வாழைக்கன்னு  இனி  பொழைக்காது என்ற நிலைமை
வந்திடுச்சு. அப்பத்தான் நான் கும்பிடற சாமி மாதிரி தீபன் சந்துருன்னு  ஒருத்தர்  வந்தார். எப்படியும் காப்பாத்த
முடியாதுன்னு
முடிவுக்கு வந்துட்டீங்க, கடைசியா ஒரு முயற்சி பண்ணுங்கன்னு கருப்பா ஏதோ ஒரு திரவத்தை கைல
 குடுத்துட்டு காச வாங்கிட்டு போனாரு. ஆனது ஆச்சுன்னு அதை ஊத்தி தண்ணி பாய்ச்சி  விட்டோம்.
நம்பவே முடியலைங்க. இனி பொழைக்காதுன்னு என்று நினைத்த வாழைக்கன்னு அடுத்த 10 வது நாள்,தள,தளன்னு
 நிக்குதுங்க என்றவர், தோட்டத்தினுள் அழைத்து சென்று காண்பித்தார். நேந்திரன் வாழையின் புதிய குருத்து
பச்சை பசேலென்று பெரியதாக விரிந்தும்,
தெளிப்புக்கு முன்புள்ள மருந்து தெளிக்காத மரத்தின் இலை நன்றாக சிறுத்தும் காணப்பட்டது. மஞ்சள் செடியின்
உயரம் நாம் சென்ற போது 4அடிக்கு குறையாமல் இருந்தது. ஆனால் சோதனைக்காக ஹ்யுமிக் ராயலை
உபயோகபடுத்தாத நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் செடி 2 அடியை எட்டவில்லை. 5 மாதமான ஜி 9 வாழை
 4 அடி உயரம் எட்டும்போதே
அதன் தண்டு முற்றிய வாழைத் தண்டை ஒத்துள்ளது. ஊடு பயிராக மஞ்சளின் நடுவில் மிளகாய், பீர்கங்காய்,
அரசாணிக்காய் போன்றவைகளின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாய் இருந்தது.

சத்தியமங்கலத்தில செந்தில்குமார்னு ஒரு விவசாயி (91504 01013) 100 கூடை தக்காளி எடுத்திட்டிருந்தார்
ஹ்யுமிக் ராயலை உபயோகிச்ச பிறகு 260 கூடை எடுத்திருக்கார்.

கோவை கரடிமடை பகுதியில் 10 ஏக்கரில் விவசாயம் செய்துவரும் திரு. பார்த்திபன் (98421 07637) அவர்கள்
இரண்டு ஏக்கரில் தக்காளியும் முக்கால் ஏக்கரில் வெண்டையும் பயிரிட்டுள்ளார். இதற்குமுன் பயிரிட்டபோது
26,000 கிலோ வரை மகசூல் செய்த இவர், ஐந்து மாதங்களுக்கு முன்பு ஹ்யுமிக் ராயலை பயன்படுத்தி
58.000 கிலோ வரை மகசூல் எடுத்துள்ளார். வெண்டை முக்கால் ஏக்கரில் 12 டன்னுக்கு மேல் அறுவடை
செய்துள்ளார். நாம் அங்கு சென்றபோது தொழிலாளர்கள் வெண்டை பறிப்புக்கு காட்டுக்குள்ளே  செல்ல தயங்கி
நின்றிருந்தனர். காரணம் கேட்ட போது செடிகளின் அடர்த்தி இதுவரை பார்க்காத அளவுக்கு அதிகமாக இருந்ததாக
இருப்பதாக கூறினார்கள். தற்போது பீர்க்கன் இரண்டு ஏக்கரில் பயிரிட்டுள்ளார். இதற்கு முன் எடுத்த மகசூலை
விட இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகம் எதிர்பார்ப்பதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.   

கோவை குப்பனூரை சேர்ந்த விவசாயி ஆறுச்சாமி (9750403895)கூறும்போது தக்காளி ஒவ்வொரு செடியிலும்
ஒரு கூடை அளவிற்கு காய் பிடித்துள்ளதாம். இதை அடுத்துள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்,
வாழை இத்தனை  வருடங்கள் பார்த்திராத அளவு செழிப்புடன் இருப்பதாக சிலாகித்து கூறும் இவர் மஞ்சளில்
நோய் தாக்குதல் இன்று வரை இல்லவே இல்லை என்கிறார். ஒரு புள்ளியோ இலை  கருகலோ சுத்தமாக இல்லை.
இதற்க்கு முன் பூச்சிக்கொல்லி மருந்துக்கு செலவிட்ட தொகையை விட குறைவான பணம் தான் இந்த ஹ்யுமிக்
ராயலுக்கு செலவானது. அதற்க்கு முன் எருவுக்கும் தொழு உரத்திற்கும் ஆகும் செலவு, ஆள் கூலி, நேர  விரயம் 
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த இயற்கை பயிர் ஊக்கி மண் வளத்தை காப்பதுடன் செழிப்பாக
வளர்ந்து நிற்பதை பார்க்கும் போதே எங்கப்பா காலத்துக்கே போன மாதிரி இருக்குங்க என நெகிழ்ச்சியுடன் கூறினார்.


எதை விதைக்கிறோமோ அதுவே விளையும் என்பது பழமொழி. விஷத்தை விதைத்து பயிர்களை விஷமாக்கி விஷ
தான்யத்தை உண்டு நோய் எதிர்ப்பு சக்திகளை முற்றிலும் இழந்து சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, மூட்டு வலி,
ரத்த அழுத்தம் புற்று நோய், கர்பப்பை நோய்கள் தாக்கியுள்ள நோயாளிகள் அதிகம் கொண்ட நாடாக
அளவில் நமது இந்தியா மாறியுள்ளது. இந்த 15 வருடங்களில், பிறந்த குழந்தையிலிருந்து 30 வயதுக்கு மேல்
பெரும்பான்மையினருக்கு சர்க்கரை நோய் வர என்ன காரணம்? நிச்சயமாக நாம் விழிப்புணர்வு இல்லாமல்
உபயோகித்த ரசாயன பூச்சிக்கொல்லி முறை தான். எனவே இதை மாற்றி உண்மையான
(ஆர்கானிக் கிரீன் ரெவல்யூஷன் ) இயற்கையான பசுமை புரட்சிக்கு வித்திட்டு இதை பரவலாக்குவது
நமது நோக்கமாக மட்டுமல்லாது கடமையாகவும் மாறவேண்டும்.
களிமண்ணை எந்த ஊர்ல போய் பாத்தாலும் கட்டி கட்டியாதான் இருக்கும். ஆனா எங்க ஹ்யுமிக் ராயலை
மண்ணுல போட்டு நாலு நாள் கழிச்சு பாருங்க மண்ணு பொலபொலன்னு இளகி இருக்கும்.
இது எப்படி வேல செய்யுதுன்னா மண்ணுல போட்ட உடனே வேர் முடிச்சுகளை திறந்து நைட்ரஜன் உருவாக்கத்தை
இயற்கையா வேகப்படுத்தி மண்ணின் சத்துக்களை செடியை ஏற்க வைக்கிறது.
மேலும் தெளிப்பின் மூலம் இலைகளின் பச்சையம் உருவாக்கத்தை தூண்டி இலைகளை பெரிதாகவும் செழிப்பாகவும்
ஆக்குகிறது. இதனால் தாவரம் தனக்கு தேவையான உணவை(ஸ்டார்ச்) அதிகமாக தயாரிக்கிறது. இது இரண்டும்
சரியாக இருந்தாலே விளைச்சல் அதிகமாகும் என்பதை நான் சொல்லவேண்டியது இல்லை.


நம்ம முன்னோர்கள் விவசாய முறை நல்லா தாங்க இருந்தது. விதைப்புக்கு முன்னால கட்டான்னு ஒரு பயிரை
போட்டு ஆள் உயரத்துக்கு வளரவிட்டு அத அப்படியே  மண்ணுல போட்டு உழவு ஒட்டி, மக்க வெச்சு அப்புறமா
பயிர் செஞ்சாங்க. இப்போ ஏன் அந்த மாதிரியான முறைகள் நாம செய்யறதில்ல.
1962 க்கு பிறகு தாங்க நம்ம நாட்டுக்கு யூரியா பசுமை புரட்சிங்கற பேர்ல உள்ள வந்தது. அத மொதல்ல
பஞ்சாப்ல உபயோகிச்சு அதிக மகசூல் எடுத்து அரசாங்கமே விளம்பரம் செஞ்சது. அத பாத்து தான் எல்லா
விவசாயிகளும் ரசாயன உரத்துக்கு மாறினாங்க. அன்னிக்கி பஞ்சம் வந்ததால முக்கிய தேவை அதிக உணவு
உற்பத்தியா இருந்தது. ஆனா இன்னிக்கு தேவை ஆரோக்யமான அடுத்த தலைமுறை தான்.
நாட்டு நலனுக்காக அதிக விளைச்சலுக்கு ரசாயனத்தை பயன்படுத்திய நாம, இன்னிக்கு அடுத்த தலைமுறைக்கு
ஆரோக்யமான, சுகாதாரமான சுற்றுச்சூழலை கொடுக்க மீண்டும் ஒரு இயற்கையான பசுமைப்புரட்சிக்கு வழி வகுப்போம்.

MIC MAC TONICX  அப்பிடின்னு ஒரு உரம். அந்த உரத்தோட முக்கியமான வேலையே பெண் பூக்களின் வளர்ச்சியை
அதிகரிக்கறதுதான். இதனால மகரந்த சேர்க்கை அதிகமா நடந்து மகசூல் தானாகவே அதிகமாகுது.
இதை கடற்பாசியிலிருந்து தயாரிக்கறோம். கடற்பாசில இருந்து தயாரிக்கற நெறய உரங்கள் சந்தைல கெடச்சாலும்
பல விதமான உயர்தர கடற்பாசிகளில் இருந்து நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பலவித ஆராய்ச்சிக்குப்பின் 
இதை நாங்க ரொம்ப கவனமா உருவாக்கறோம்.  கொழந்தைய வளர்க்கற மாதிரி.
செயல்பாட்டில ஹ்யுமிக் ராயல் கொழந்த மாதிரின்னா  மிக் மேக் அதுக்கு அம்மா மாதிரி.
பொறந்த கொழந்தை எவ்ளோ அதிகமா தாய்ப்பால் குடிக்குதோ அந்த அளவுக்கு அதிகம் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகம் இருக்கும். புட்டிப்பால் குடிச்சா அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஒடணும். அதே மாதிரி பயிருக்கு
தேவையானதை கொடுத்தா அது நோய் தாக்குதல் இல்லாம இருக்கும்.
ஒரு முக்கியமான விஷயங்க. நாம சாப்பிடற சாப்பாடு தான் நம்ம குணநலன்களை முடிவு செய்யுது. அதில
யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இனி நீங்களே முடிவு பண்ணுங்க. நம்ம கொழந்தைங்க
இயற்கையா வெளஞ்சத சாப்பிடனுமா. இல்ல ரசாயனத்த சாப்பிடனுமான்னு. மேலும்  இன்னும் சில தினங்களில்
இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகள் வண்டு, பேன், புழு , வேர்ப்புழு மற்றும் பல நோய்களுக்கான
இயற்கையான பூச்சிகொல்லி  மருந்துகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.


SDLBL ன் குறிக்கோளே " இந்தியாவில் ரசாயன உரத்தால பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு மீண்டும் புத்துயிர்
அளித்து, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுசென்ற அற்புதமான உலகத்தை அடுத்த தலைமுறைக்கு 
கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான். ஒரு கை தட்டினா ஓசை வராது. இந்த உலகத்தை மாற்றும்
இன்னொரு கை விவசாயினுடையது. அந்தக் கையோடு எங்கள் கையையும் சேர்த்து இந்த மாற்றத்தை நிகழ்த்துவோம்.
என்று உறுதி பட கூறியவர் " இந்தியா போன்ற விவசாயத்தை தொழிலாக கொண்ட நாட்டில, மேலை
நாடுகளுக்கெல்லாம் நம் முன்னோர்கள் கற்றுக்கொடுத்த ஒரு விஷயத்த, இப்போ மறுபடியும் புதுசா சொல்ல
வேண்டியிருக்குன்னு  நெனைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. ஒரு நல்ல தொழில் நுட்பம் என்னோட
கைல கெடச்சிருக்கு. இத சரியான நேரத்துல கொண்டுபோய் சரியான எடத்தில சேர்க்கணும். இதுக்காக தான்
 ஆண்டவன் என்னை நல்ல லாபம் தரக்கூடிய கட்டுமானத்துறையில் இத்தனை வருஷம் ஈடு பட வெச்சு,
சம்மந்தமே இல்லாத துறையில கால் பதிக்க  வெச்சிருக்கான்.
இதை நான் தொடங்கும்போது எவ்ளோ லாபம் வரும்ன்னு கணக்கு போட்டு தொடங்கலைங்க.
நான் சம்பாதிச்சதெல்லாம் இந்த மண்ணை மாத்த உபயோகமாச்சுனா சந்தோஷமா செய்வேன்.
அதுமட்டுமில்லால் விவசாயிகளுக்கு எங்களால் முடிந்த அனைத்து விதமான அறிவியல் ஆலோசனைகள்,
நிதி உதவிகள், மானிய விபரங்கள் போன்ற உதவிகளையும் செய்வதற்கான ஒரு தனி குழுவை அமைக்க
 இருக்கிறோம்.
அதுமட்டுமில்லாமல் இளைய தலைமுறையினருக்கு பாரம்பரிய உணவு முறைகளை அறிமுகப்படுத்தி, மேற்கத்திய
உணவு முறையின் தீமைகளையும் நம் பாரம்பரிய  உணவின் நன்மைகளையும் ஒரு குறித்த விழிப்புணர்வையும்
ஏற்படுத்த போகிறோம்.

இது எல்லாவற்றையும் விட  வரும் காலங்களில் எத்தனை  லட்சம் ஏக்கர் நிலத்தை ரசாயனமில்லாத நிலமாக
மாற்றப் போகிறோம், எத்தனை விவசாயிகளை  இயற்கை வேளாண்மை நோக்கி ஈர்க்க போகிறோம் என்ற ஒரே
எண்ணத்துடன், கோவையில் துவங்கி ஓர் உலக சாதனை நிகழ்த்தும் வேகத்துடனும் வீரியத்துடனும் எங்கள்
பயணத்தை துவங்குகிறோம்...



பெட்டி செய்தி
சீன போன்ற அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியான
(ஹ்யுமிக் குருணை மற்றும் பவுடர்  )
சில உரங்கள் ஹ்யுமிக்கில் நனைத்து எடுக்கப்பட்ட மண்ணைத்தான் உரம் என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள்.
இது கர்நாடக மாநிலத்தில் பயிர் கருகுதல் போன்ற எதிர்மறை ஏற்படுத்தியதால் கர்நாடக அரசு இதை தடை செய்தது.
நம்மைபோன்ற தரமான தயாரிப்புகள், கர்நாடக அரசின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் மூலம் ஆய்வு செய்து விற்பனை
செய்ய அனுமதித்துள்ளது.

தமிழக இளைஞர்களுக்கு SDLBL ன் அறைகூவல்
............................................................................................................ 
தமிழகத்தில்  உள்ள படித்த மற்றும் படிக்காத, துடிப்பு மிக்க இளைஞர்களுக்கு SDLBL ன் அவசர அழைப்பு.
தமிழகத்தை ரசாயனமில்லாத மாநிலமாக மாற்றும் எங்களின் குறிக்கோள் தங்களுக்கும் இருந்தால்,
இயற்கையாக ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்யவும், வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்யவும்
அனைத்துவிதமான ஆலோசனைகளையும் வழங்கி, ஊக்கப்படுத்தி, வழிநடத்தவும் எங்கள் குழு எப்பொழுதும் தயாராக
உள்ளது.
94430 43150
ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டுக்கு வெளியே புதர் மண்டிய புற்களை சுத்தப்படுத்தலாம் என்ற எண்ணத்துடன் மண்வெட்டியுடன் மண்ணைக் கிளறிக்கொண்டு இருந்தேன். அங்கு வந்த நண்பர் மார்க்கும், சந்தோஷும் " உள்ளூர் செய்தியிலிருந்து உலகச் செய்திவரை உங்க பத்திரிகைல வருது. இங்க இருக்கிற இருகூர்ல பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு இப்போ விவசாயம் பாத்திட்டிருக்கார் என்றதும் நம்மையும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. மண்வெட்டியை அவரிடம் கொடுத்து புல்லை கொத்த சொல்லி விட்டு பத்தே நிமிடங்களில் குளித்து முடித்து ரெடியாகி "கெளம்பலாம் வாங்க" என்ற படி வண்டியை எடுத்தேன்.
ஒண்டிப்புதூரிலிருந்து திருச்சி சாலையில் கிழக்கு நோக்கி பயணித்தால் இரண்டாவது கிலோ மீட்டரில்
L & T பை பாஸ்க்கு சற்று முன்பாக உள்ள இருகூர் பிரிவு. அதிலிருந்து இடது புறமாக திரும்பி, சிறிது தூரம் சென்றால், நீண்ட நாட்களாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த இருகூர் பாலம், தற்போது திறக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது .
இதுவரை இவ்வளவு உயரத்தில் இருந்து பார்த்திராத இருகூரை,
சில்லென்ற காலைப் பனியுடன் பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருந்தது. பாலத்தின் முடிவில் ஊரின் துவக்கம்.
பழமையான ஒரு கோவிலைக் கடந்து இடது புறமாகத் திரும்பி, ஜின்னிங் பேக்டரி ரோட்டை அடைந்த போது  சாலை தோண்டப் பட்டிருந்தது.
அதையும் தாண்டி இருகூர் டூ சின்னியம்பாளையம் சாலையில் ஒரு சிறிய கால்வாயை தாண்டி சிறிது தூரத்தில் இருந்தது நஞ்சப்பன் என்பவரின் தோட்டம்.
கேட்டின் முன் வண்டியை நிறுத்தியதும் முதல் ஆளாக நம்மைப் பார்த்து குறைத்து வரவேற்றது, தற்போது அழிந்து வரும் அறிய வகை நாய்
இனமான சிப்பிப்பாரா எனும் கன்னி வகை நாய்.
முன்பு இந்திய விவசாயிகளின் நெருங்கிய தோழனாக விளங்கிய
இந்த இனம் வேகமாக ஓடுவதில் சிறுத்தைக்கு அடுத்தபடியாக இருக்கும். வேட்டைக்கும் காவலுக்கும் வளர்க்கப்படும் இதைப்  பற்றி விரிவாக ஒரு கட்டுரையே எழுதலாம்.
இளம் விவசாயி சதீஷ் நம்மை கை குலுக்கி வரவேற்றதை கண்டதும் தன குறைப்பை நிறுத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டது.
"இளநீர் சாப்பிடுங்க" என்று உபசரித்தார் சதீஷின் தந்தை ஆறுச்சாமி. இவர் ஒரு முன்னாள் மில் தொழிலாளி. தென் இந்தியாவின் மான்செஸ்டராக இருந்த கோவையில் நூற்பாலைகள்  இழுத்து மூடப்பட்டு தற்போது கல்யாண மண்டபங்களாகவும், அடுக்கு மாடிக் குடிருப்புகளாகவும் மாறி விட்டது.
பூச்சிக்  கொல்லிகளுக்கு சற்றும் சளைக்காமல்,
அதற்கு இணையாக மனித உடலுக்கு ஊறு விளைவிக்கும் சர்வதேச குளிர்பானங்களின் சுவையை விட அதி அற்புதமாக  இருந்தது அவர் தந்த இளநீரின் சுவை.  நாக்கில் பட்டதும் "சுரீர்"  என
உறைத்ததைச் சுவைத்தபடி அவருடன் பேசத் தொடங்கினோம்.

27 வயது நிரம்பிய சதீஷ் குமார் (98425 95433) பி எஸ் சி, எம்பிஏ,
PGDHRM( மனித வளம் மற்றும் மேம்பாடு) ல் முதுகலை பட்டம் பெற்று ஒரு தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மன அழுத்தம் நிறைந்த அந்தப் பணி அவருக்கு மன நிறைவை தரவில்லை. ஒரு கட்டத்தில் அது சலித்துப் போனது.
விவசாயத்திற்கு வந்ததை அவரே விவரிக்கிறார்.
" எந்திர மயமான இந்த நகர வாழ்க்கை ஒரு கட்டத்துக்கு மேல அலுத்துப்போச்சு. எங்க தாத்தா காலத்தில பாத்த உண்மையான கிராமச்சூழல் இன்னிக்கு எங்கேயும் பாக்க முடியல. அது மாதிரியான ஒரு சூழலை உருவாக்கி முன் மாதிரியா இருக்கணும்னு யோசிச்சேன். அதத்தான் இப்போ இங்க பாக்கறீங்க.
அதுக்காக நான் பாத்திட்டிருந்த வேலைய ராஜினாமா செஞ்சேன்.
வருமானமும்  நண்பர்கள் கிட்ட பேசி ஏலச்சீட்டு தொடங்கினேன். அஞ்சாறு மாசத்தில ஓரளவு பணம் சேந்ததும், விளம்பர நிறுவனம் தொடங்கினேன். அதுலயும் ஓரளவு நிலையான வருமானம் வரத்தொடங்கிச்சு. inime  வருமானத்துக்கு பிரச்சனை இல்லேன்னு தெரிஞ்சதும், சுத்து வட்டாரத்தில குத்தகைக்கு  விவசாய நிலம் கெடைக்குமான்னு தேடினேன். அப்போ தான் விவசாயத்தில் முதிர்ந்த அனுபவம் நிறைந்த நஞ்சப்பன் என்பவரின் நிலம் கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்தே இயற்கை விவசாயம் செய்து வந்த அவரின் நிலத்தில் என்னுடைய வேலை இன்னும் எளிதாக ஆனது. குத்தகைக்கு கொடுக்கும்போதே கறாராக ரசாயன உரம் உபயோகிப்பதாக இருந்தால் உள்ளே வரவேண்டாம் என்றார். என்னுடைய எண்ணத்தை அவரிடம் விளக்கிய போது சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.

குத்தகைக்கு எடுத்ததும் முதலாக தீவனப் பயிருடன் மக்காக்சோளம்
போட்டேன். எங்க கால்நடைகளுக்கு போக மீதியை வெளிய வித்தேன். அதுல கெடச்ச பணத்தில புறா மற்றும் நாட்டுக் கோழிகளை வாங்கினேன். எங்கிட்ட இருக்கிற ஆடு, கோழி, புறா, நாய் எல்லாமே இந்தியாவின் பாரம்பரிய இனங்கள் மட்டும் தான்.
3 ஏக்கர்ல தென்னை இருக்கு. அது போக இப்போ நெறைய தென்னம்பிள்ளை வெச்சிருக்கேன். அதுக்கு ஆட்டுக் கழிவு, மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் கரும்புச் சர்க்கரை இதையெல்லாம் போட்டு அதுக்கு மேல பண்ணைக்  கழிவுகளால மூடி அதுக்கும் மேல தென்னை ஓலைகளை தனித்தனியா பிரிச்சு மூடி வெக்கறேன். பத்து நாளைக்கு ஒருமுறை தான் தண்ணி விடறேன். இந்த முறைல செய்யும்போது ஈரப்பதம் குறையாம இருக்கு. மண்புழு நெறைய உற்பத்தியாகுது.தண்ணீரும் நெறைய மிச்சமாகுது.
தீவனப் பயிருக்கு ஒரே ஒரு முறை மட்டும் களை எடுத்திட்டு ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் நடுவுல பண்ணைக் கழிவுகளைப் போட்டு அதுக்கு மேல தென்னை ஓலைகளை போட்டு "மூடாக்கு" என்ற முறையில் செய்வதால்  அதுக்கப்புறம்  களைகள் வர்றதில்ல. மேலும் தீவனத் தட்டை அல்லது தட்டைப் பயிறு போன்ற விதைகளை இடைப்பட்ட இடத்தில விதைப்பதன் மூலம் களையும் வருவதில்லை. அதை உட்கொள்ளும் கால்நடைகளும் ஆரோக்யமா இருக்குதுங்க. இப்போ இருக்கிற ஆள் பற்றாக்குறைல வேலைக்கு ஆள் கெடைக்கிறதில்ல. அப்படியே கெடச்சாலும் கூலி கொடுத்து கட்டுபடியாகாது. களை எடுக்க கொடுக்கும் கூலிக்கு தீவனம் வாங்கிரலாம். நான் முதல் முறை, களை எடுக்க கொடுத்த கூலி 8,500 ரூபாய். அதுக்கப்புறம் தான் யோசிச்சேன் இதுமாதிரி செலவுகளை எப்படி குறைக்கலாம்னு. களை எடுக்கும் கருவிகளை வாங்கியோ உபயோகப்படுத்தி இதை செஞ்சிருந்தா கூட இவ்வளவு செலவு வந்திருக்காதோன்னு தோணுது. நம்ம முன்னோர்கள் எவ்வளவோ நல்ல நல்ல உத்திகளை கையாண்டிருக்காங்க. காலப்போக்கில அதெல்லாம் நாம கைவிட்டதோடல்லாமல், களைக்கொல்லி போன்ற உயிர்க்கொல்லிகளை உபயோகிச்சு, மண் வளத்தை கெடுத்து, ரசாயன உரத்தில வெளஞ்ச உணவு தானியங்கள சாப்பிட்டு நம்மளோட மன வளத்தையும் கெடுத்துக்கிட்டோம். காய்கறில கொஞ்சமா ரசாயனம் இருந்தது  இப்போ மாறி, ரசாயனத்தில கொஞ்சமா காய்கறி இருக்கு. அதுவும் நம்ம மூதாதையர்கள் விட்டுசென்ற மிச்சத்தின் எச்சம் தான். ஒரு விஷயத்தில நான் ரொம்ப தெளிவா இருக்கேன். மகசூல் அதிகமா கெடைக்கும்கறதுக்காக வெளிநாட்டு விதைகளையோ, மரபணு மாற்றப்பட்ட விதைகளையோ உபயோகப்படுத்த மாட்டேன் என்றவரிடம் " இதை உங்க மன நிம்மதிக்காக மட்டும் தான் பண்றீங்களா"  என்று கேட்டதும் சற்று சிந்தித்து, சற்றும் தாமதியாமல் "சார், இதை நான் ஆரம்பிக்கும்போது நீங்க சொன்ன மாதிரி என்னோட நிம்மதிக்காக தான் ஆரம்பிச்சேன். ஆனா இப்போ கொஞ்சம் கொஞ்சமா விவசாயத்த பத்தி தெரிஞ்சிக்க தொடங்கும் போதே, இத்தனை லாபம் இருக்கிற விவசாயத்தை ஏன் எல்லாரும் நஷ்டம்னு சொல்றாங்கன்னு புரியல. என்னோட பார்வையில விவசாயம் நஷ்டமில்லாத, நல்ல ரொம்ப லாபம் கொடுக்கற, நிம்மதியான ஒரு தொழில். நம்ம விளைவித்து கொடுக்கற ரசாயனக் கலப்பில்லாத காய்கறி எத்தனை பேர் சாப்பிடறாங்க. அதுவே எவ்ளோ பெரிய சேவை.
அதனால தான் பெரிய பெரிய நிறுவனங்கள் பெரிய அளவில விவசாயத்தில ஈடுபடறாங்க. லாபம் இல்லேன்னா விவசாயத்துக்கு அவங்க ஏன் வரணும் என்றார்.

"சரி முதல் முயற்சியா விவசாயம் பண்ண தொடங்கியிருக்கீங்க. எவ்வளவு வருமானம் வரும்னு எதிர் பாக்கறீங்க? என்றதும் "  வருமானத்துக்கு மொதல்ல சின்னதா காய்கறித் தோட்டம் போடப் போறேன். அதுல அதிக மகசூல் வர்றதுக்காக, தேனீ வளர்க்கும் பெட்டிகளை ஆறு ஏக்கர்லயும் வெக்கறேன். மகரந்தச் சேர்க்கை ரொம்ப அதிகமாவும் வேகமாகவும் நடக்கும்.தேனீக்கள் அதிக தேன் எடுக்க நல்ல லாபம் தர்ற பூ வகையான சம்பங்கியும், வாழையும் பயிரிடப் போறேன். இதனால விளைச்சலும் அதிகமாகும். நெறைய தேன் வர்றதால சுத்தமான தேனை நல்ல விலைக்கு விக்கவும் முடியும்.
மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை தொழுவதிலோ பட்டி போட்டு அடைத்தோ வைக்காமல், தென்னையின் நடுவே சிறு தானியங்களை பயிரிட்டும் மற்றும் இயற்கையாக வளரும் புற்களை மேய அவற்றை சுதந்திரமாக நடமாட விடுவதால் ஆரோக்யமாகவும் சுதந்திர உணர்வுடனும் இருக்கும்.
வேலை ஆட்களை நம்பி நாங்க இதை செய்யல. அம்மாவும், அப்பாவும், தம்பி முரளியும்  காலைல வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு தோட்டத்துக்கு வந்திருவாங்க. ஆனந்தமா எங்களால முடிஞ்ச வேலைய சந்தோசமா செய்யறோம். சோர்வு அடையும்போது ஆடு மேய்க்கறது, நாய், முயல், புறா இதுங்க கூட கொஞ்ச நேரம் இருக்கறதுன்னு அதுல கெடைக்கற சந்தோஷம் என் வாழ் நாள்ல இப்ப தாங்க அனுபவிக்கிறேன்.
இதுல இன்னும் நெறைய விஷயங்கள தெரிஞ்சிக்க, அனுபவம் வாய்ந்த விவசாயிகள சந்திச்சு என்னோட சந்தேகங்கள நிவர்த்தி செஞ்சுக்கறேன். எந்த விதமான பண்ணைக் கருவிகளை உபயோகப்படுத்தலாம், குறைவான தண்ணீர்ல எப்படி விவசாயம் செய்யலாம் அப்படிங்கறத பத்தி நெறைய விஷயங்கள ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கேன்.
காரமடை பக்கத்தில ஒன்னிபாளையம்ன்கிற ஒரு சின்ன கிராமத்தில தான் எங்க தாத்தா தோட்டம். என்னோட சின்ன வயசில, ஸ்கூல் லீவுக்கு அங்க போவோம். அப்போ நான் பார்த்த செடி, கொடி, மரம், ஆடு, மாடு, கோழி, முயல், புறான்னு அதுங்க கூட இருந்த அந்த சந்தோஷம், பன்னாட்டு நிறுவனம் தந்த சம்பளத்த வாங்கும் பொது கொஞ்சம் கூட கெடைக்கல. அதுக்கு மாறாக டென்ஷனும் மன உளைச்சலும் தான் கெடைச்சது. ஆனா இப்போ இருக்கிற நிம்மதி, இந்த சந்தோஷம் கோடி ரூபா கொடுத்தாலும் கெடைக்காது. என்னோட காய்கறி தோட்டத்தில வெளையற காய்கறிய வேற எங்கயோ கொண்டு போய் விக்காம உள்ளூர் மக்களுக்கு குறைந்த விலையில கொடுப்பேன்.
உதாரணமா, அவரைக்காய் இப்போ கடைல 40 ரூபா விக்கிது. ஆனா விவசாயிகிட்ட 15 ரூபாய்க்கு வாங்கறாங்க. அதையே நான் 20 ரூபாய்க்கு கொடுத்தா. சந்தோஷமா வாங்குவாங்க. எனக்கும் ஒரு கிலோவுக்கு அஞ்சு ரூபா அதிகம் கெடைக்கும்.
சுத்தமான தேன் ஒரு கிலோ ஐநூறு ரூபாய்க்கு கடைல கெடைக்குது. அதை 200 ரூபாய்க்கு கொடுத்தாலும் எனக்கு லாபம் தான்.தேன் சேகரிக்க 10 பெட்டி வெக்கறேன். ஒரு பெட்டில வருஷத்துக்கு 10 லிட்டர் கெடைச்சாலும், 10 பெட்டிக்கு 100 லிட்டர். 100 க்ஸ்  ரூ.200 . ரூ. 20,000.

ஆடு இப்போ 10 இருக்கு.ரெண்டு வருஷத்துக்கு மூணு ஈத்து
ஒரு ஆடு ரெண்டு குட்டி போடும். ரெண்டு வருஷத்தில 60 குட்டி.
அதுல எப்படி கொறைஞ்சாலும் ரூ.1,50,000 வருமானம்..

10 தாய்க்கோழி இருக்கு. வருஷத்துக்கு 3 அடை வைக்கும். ஒரு அடைக்கு 15 குஞ்சு.
மொத்தம் 150. ஒரு கோழி ரெண்டு கிலோ எடை போட்டாலும்  300 கிலோ.
நாட்டுக்கோழி குறைஞ்சபட்சம் 200 ரூபாய்க்கு கொடுத்தாலும் வருஷத்துக்கு ரூ.60,000

புறா 25 ஜோடி இருக்கு. ஒரு வருஷத்தில 4 தடவ குஞ்சு பொரிக்கும்.
ஒரு புறா 8 குஞ்சு வரை பொரிக்கும். ஒரு ஜோடி கொறஞ்சது 200 ரூபாய்க்கு கொடுத்தாலும், 400 ஜோடிக்கு வருஷத்துக்கு ரூ.80,000 வருமானம்.
இதெல்லாம் விவசாயத்துக்கு உதவி செய்யற ஆடு, கோழி, புறா, தேனீ  மூலமா வர்ற உபரி வருமானம். இதுல வர்ற வருமானமே என்னோட குடும்ப செலவுகளுக்கு போதும். இதுக்கு அப்புறமா விளைவிக்கற பொருட்களை விற்பனை செய்யறது மூலமா கெடைக்கறது இன்னும் அதிக வருமானம் கெடைக்கும் அதுல சந்தேகமே இல்ல.
இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும்போது விவசாயத்தை ஏன் சிலபேர் நஷ்டம்ன்னு சொல்றாங்கன்னு புரியல. எந்த தொழிலா இருந்தாலும் அதில சில பிரச்சனைகள் இல்லாம இருக்காது. அதுக்காக அந்த தொழிலே செய்யாம இருக்க முடியுமா. அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வுன்னு பாக்கணும். மழை இல்ல, தண்ணி இல்ல, ஆள் கெடைக்கல, அரசாங்கத்தோட உதவி கெடைக்கலன்னு பொலம்பிட்டு இருக்காம நம்மால என்ன செய்ய முடியுமோ அத செஞ்சாலே போதும். குறைந்த பட்சம் என்னோட குடும்பதேவையை இப்போ என்னால பூர்த்தி செய்ய முடியுது. ரசாயனமில்லாத இயற்கையான காய்கறி, பழங்கள், சுத்தமான காத்து, இது மாதிரி அவங்கவங்க தேவையை பூர்த்தி செஞ்சதுக்கப்புரமா மீதம் ஆனதை கொறஞ்ச வெலைக்கு வித்துருங்க. விவசாயத்தில லட்ச லட்சமா சம்பாதிக்க முடியும். ஆனா அந்த இலட்சங்கள மட்டுமே மனசில வெச்சிட்டு வேலை செஞ்சிட்டு,  கொஞ்சம் விலை இறங்கினாலும் விரக்தியோட உச்சத்துக்கே போறாங்க. இப்ப சொல்லுங்க விவசாயத்தில நஷ்டம்ன்னு யாரவது சொன்னா என்ன பண்ணலாம்? என்று கேள்வி கேட்ட நம்மிடமே கேள்வியுடன் முடித்தார்.
நாம் இதுவரை சந்தித்த ஏராளமான  விவசாயிகளின் புலம்பல்களை கேட்டிருக்கிறோம். இந்தக்கட்டுரை வெளிவரும் (2014 ஜனவரி) புத்தாண்டில்  இதைப் படிக்கும் லட்சக் கணக்கான வாசகர்களில் சில ஆயிரம் பேரையாவது யோசிக்க வைக்கும்.
இயற்கை விவசாயத்தை நேசிக்க வைக்கும்.சில நூறு பேர்களையாவது இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைக்கும் என்ற நம்பிக்கையுடன் சதீஷ்குமாரை வளரும் விவசாய தமிழகத்தின் சார்பாக வாழ்த்தி விடை பெற்றோம்.






















 




ஞாயிறு, 11 மே, 2014

சுழன்றடித்த  காற்று, வேரோடு சாய்ந்த வாழைகள், வேதனையில் விவசாயிகள்
மேட்டுப்பாளையத்துக்கு அருகில் உள்ள சிறுமுகை. போன  வாரம்  மழை  வருவது  போல் ஒரு தோற்றத்தை உருவாக்கிய ஒரு காற்று, அனைத்து விவசாயிகளையும் ஏமாற்றிச்சென்றது. ஏமாற்றம் மழை வராததால் அல்ல. வந்த காற்று சிறுமுகை தொடங்கி அன்னூர், கரியாம்பாளையம், எளகம்பாளையம், காளப்பட்டி, வெள்ளானைப்பட்டி தாண்டி சூலூர் வரை சென்று, கோரத்தாண்டவம் ஆடி, வாழை மரங்களை சாய்த்து விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.சண்முகசுந்தரம் (93628 26262)எதேச்சையாக வெள்ளானைப்பட்டி விவசாயி சண்முகசுந்தரம் அவர்களின் தோட்டத்திற்கு சென்ற போது தான் இதை கூறினார். தோட்டத்தில் சென்று பார்த்த போது பகீரென்று இருந்தது. சிறிது நாட்கள் முன்பு தான் நண்பருடன் சென்று தோட்டத்தை பார்த்தோம். நேந்திரன் வாழைக் குலைகள் அபாரமான வளர்ச்சியை அடைந்திருந்தது. ஒவ்வொரு குலையும் பதினைந்து கிலோவுக்கும் மேல் இருந்தது. அறுவடைக்கு இன்னும் பத்து நாட்களுக்கும் அதிகம் இருந்தது. அதற்குள்  இந்த விபரீதம். "அறுவடை முடிஞ்சிருந்தா பத்து லட்ச ரூபா கிடைச்சிருக்கும். எல்லாம் போச்சு" என்றவருக்கு ஒரு ஆறுதல் மஞ்சளில் நல்ல மகசூல். தற்போது  ஓரளவு  கட்டுபடியாகும்  விலை. அதனால் மனிதர் கொஞ்சம் உற்சாகமானார். இதில் முக்கியமான விஷயம் இவர் விவசாயம் செய்யத்தொடங்கி ஒரு வருடம் தான் ஆகிறது. இப்போது  வீழ்ந்து போன வாழைகள் தான் இவர் முதன் முதலாக நட்டது. முதல் முறை நட்ட வாழைகள் வேரோடு சாய்ந்து மிகப்பெரிய சேதத்தையும், அதை விடப்பெரிய படிப்பினையும் தந்திருக்கிறது. "பட்டம் மாறி வாழை நட்டேன். காத்து குறைவா இருக்கிற நேரத்தில அறுவடை நடந்தா இது மாதிரி நட்டம் வந்திருக்காது.  வாழைல பூ விட்டு குலை புடை தள்ளும் நேரத்தில சவுக்கு பூட்டு வெச்சு முட்டுக் கொடுக்கணும். இன்னும் கொஞ்சம் உறுதியா இருக்கணும்னா நைலான் கயிறால ஒவ்வொரு வாழையையும், கட்டி ஒண்ணோட ஒண்ணா கட்டி பெல்ட்டு போடணும். ஒவ்வொரு வரிசையோட இரண்டு புறமும் இழுத்து கட்டணும். இப்படி செஞ்சிருந்தா ஓரளவு நட்டம் வராம சமாளிச்சிருக்கலாம். முதல் முறை செஞ்ச விவசாயத்தில எனக்கு கெடச்சது கொஞ்சம் காஸ்ட்லி எக்ஸ்பீரியன்ஸ்" என்றார். கேட்கும் போதே கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.வருத்தப்பட்டுக்கொண்டே வண்டியை எடுத்து அன்னூர் நோக்கி செலுத்தினோம். போகும் வழி எல்லாம் காற்றாடிய கோரத்தாண்டவத்தை பார்த்து கொண்டே சென்று கொண்டிருந்தோம்.
மூர்த்தி (97156 49575) கரியாம்பாளையம் கிராமத்தை அடுத்துள்ள க்ரிஷ்ணாக்கவுண்டன் புதூரைச் சேர்ந்த பழனிச்சாமி மற்றும் மூர்த்தி சகோதரர்கள் (97156 49575) நான்கு ஏக்கரில் வாழை வைத்திருந்தார். அதில் மூன்று ஏக்கர் வாழைகள் காற்றில் நாசமடைந்து விட்டன. இவர் காற்றில் வாழை சாயாமல் இருக்க பெல்ட்டு போட்டு வைத்திருந்தார். அதையும் மீறி வாழைகள் சாய்ந்து விட்டன.                     
பெல்ட்டு போட்டதால் தப்பி பிழைத்து அறுவடை முடிந்த வாழைகள்.  பெல்ட்டு போட்டா வாழை காத்துக்கு சாயாதுன்னு சொன்னாங்க. இங்க இத்தனை  வாழை நாசமாயிருக்கு" என்று கேட்டதற்கு " பெல்ட்டு போட்டா ஓரளவு அடிக்கிற காத்துக்கு தாக்குப் பிடிக்கும். போன வாரம் அடிச்ச காத்து ரொம்ப வேகமா வீசிச்சுங்க. சூறாவளி மாதிரி இருந்தது. சுழட்டி அடிச்சதுல வாழை இல்லை எல்லாம் நாப்பதடி உயரத்துக்கு பறந்தது. பட்டம் மாறி விதைச்சது காரணம்னு சொல்ல முடியாது. சரியா முட்டு குடுத்திருந்தா காப்பாத்தி இருக்கலாமோன்னு  இப்போ தோணுது. அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து அதிகாரிகள் வந்து பார்த்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் ஆலோசனை கேட்டதற்கு யோசித்து சொல்கிறோம் என்று சொன்னார்களாம்.
கிளம்ப ஆயத்தமானோம். " இருங்க டீ சாப்பிட்டு போலாம்" என்றார். இது தான் கோவையின் குணம். என்னதான் நட்டமடைந்தாலும், மனதுக்குள் ஆயிரம் வேதனை இருந்தாலும், வந்தவர்களை உபசரிக்கிறார்கள். நாம் சென்ற போது டெம்போவில் அறுவடையான பொருட்களை வேலையாட்களோடு சேர்ந்து மூர்த்தியும் ஏற்றிக்கொண்டிருந்தார். அவருடைய வேலையை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்து " பரவால்லீங்க, இன்னொரு நாள் அவசியம் வர்றேன் என்ற படி வண்டியை எடுத்தேன்.முன்னொரு  காலத்தில் ஒரு சிற்றோடை இருந்ததற்கான அறிகுறியாக ஒரு பள்ளமும், அதை ஒட்டி சற்று அகலமான கரையும் இருந்தது. அந்தக் கரையின் மீதேறி வண்டியை செலுத்தி மீண்டும் சத்திய மங்கலம் மெயின் ரோட்டை அடைந்தேன்.
மன்னர் காலத்தில் மாதம்  மும்மாரி,  இப்போது  வருடம்  இருமாரிஇனி வரும் காலங்களில் அதுவும் உருமாறி, நம் எதிர்கால சந்ததிக்கு வாழ்நாளில் கிடைக்குமா ஒரு மாரி?
மரங்களை உருத்தெரியாமல் அழித்து, நம் தாயை விட மேலான இயற்கை அன்னையின் வயிற்றில் அடித்து, தாயின் கருப்பையை துளையிடுவது போல் ஆழ்துளை கிணறுகளை துளைத்து, சவக்குழிகளை நமக்கு நாமே தோண்டிக்கொண்டோம். விதைப்பதற்காக தோண்டிய கிணறுகள், நம் குழந்தைகளை புதைப்பதற்காக மாறிவிட்டது. இதை உணர்த்தத்தான் அடிக்கடி குழந்தைகள் அதனுள் சிக்கி, தன்னுயிரை மாய்த்து நமக்கு புரிய வைத்தார்கள். நமக்கா புரியும்?
மரங்களை வளர்க்க வேண்டும். அதன் மூலம் மட்டும் தான் மழை பெய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், வேறு யாராவது வைப்பார்கள் என அனைவரும் ஒதுங்கிப் போனால், வரும் தலை முறை மழை என்பதை யூ ட்யுபில் மட்டும் தான் பார்க்க முடியும். இல்லை என்றால் கேரளாவுக்கோ, கர்நாடகாவிற்கோ அல்லது சிரபுஞ்சிக்கோ சுற்றுலா சென்று மழையை தரிசிக்கலாம். சிறுமுகை தாண்டி எளகம்பாளையம் கிராமம். தங்கராஜ் (9442002917)
முப்பது ஏக்கரில் முழுக்க முழுக்க வாழை விவசாயம் தான்.அதில் ஆறு ஏக்கரில், நேந்திரன் குவிண்டால் வாழைகள், இன்னும் இருபது நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்தது. 5000 வாழைகள் சாய்ந்துள்ளது. மற்ற வாழைகள் அளவில் சிறியதாக இருந்ததால் பெரிய பாதிப்பில்லை.     மொதல்ல பன்றிங்களோட தொல்லை அதிகமா இருந்துது. நைட்டு தோட்டத்துக்குள்ள வந்து பாத்தா பன்றிங்க கூட்டமா வாழைங்கள நாசம் பண்ணிட்டிருக்கும். விரட்டி விட்டா நாலா புறமும் சிதறி ஓடிரும். அதிலேயே சின்ன வாழைக் கன்றுகள் ஒடிஞ்சு விழுந்துரும். அதை தடுக்க வெள்ளை வேட்டிய தோப்புக்குள்ளகட்டி விட்டா, காத்துல ஆடும்போது பன்றிங்க வர்றது குறைஞ்சிருக்கு. இப்போ அடிச்ச காத்து, இதை யாருமே எதிர் பாக்கல.
நான் இதை நேரடியா கேரளாவுக்கு அனுப்பிட்டிருக்கேன். அது மட்டுமில்லாம இந்த சுத்து வட்டாரத்தில இருக்கிற வாழை விவசாயிகளிடம் கொள்முதல் செஞ்சும் அனுப்பறேன். நான் வாழை விவசாயம் மட்டும் தான் பண்றேன். தமிழ் நாட்ல பழங்களுக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு இல்ல. கேரளாவில இதை நிறைய உபயோகிக்கறாங்க. விவசாயிகள் கெடைக்கற காசு கெடைச்சா போதும்னு இங்க இருக்கிற வியாபாரிகள் கிட்ட கொடுத்திர்றாங்க. இது மாதிரி நட்டம் வர்ற போது ரொம்ப பாதிக்கப்படறாங்க. இந்த வாழை அறுவடை செஞ்சிருந்தா முப்பது லட்ச ரூபாய்க்கு மேல கெடச்சிருக்கும்" என்று முடித்த தங்கராஜ் வருத்தத்தை வெளிக்காட்டாமல் சிரித்துக் கொண்டே தான் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் விடை பெற்று கிளம்பும்போது மாலை ஆறு மணியை தாண்டிக் கொண்டிருந்தது.நாம் சென்ற அன்று வெள்ளிகிழமை என்பதால் கோவை வேளாண்மைப் பல்கலை கழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர்பு கொள்ள முடியாது. தமிழ் நாட்டில்  வாழை விவசாயம் நடை பெரும் சில இடங்களில், காற்றிலிருந்து வாழைகளை காப்பாற்ற ஒவ்வொரு மரத்திற்கும் மூன்று சவுக்கு கட்டைகளை வைத்து முட்டுக்கொடுப்பார்கள். எவ்வளவு பலமான காற்றையும் அது தாக்குப் பிடிக்கும். ஒரு டன் சவுக்கு மரத்தின் விலை 12,000 ரூபாய். அதில் 600 கட்டைகள் இருக்கும். அதை வைத்து கட்ட ஆகும் செலவு, ஆள் கூலி, இவற்றை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் வரும் தொகையை சிறு விவசாயிகளால் செய்ய முடியாது. சரி மாற்று வழியாக என்ன செய்யலாம்?
தோட்டத்தில் எல்லையில் மிக நெருக்கமாக சவுக்கு மரங்களை வளர்க்கலாம். அது காற்றை ஓரளவு கட்டுப்படுத்தும். அதை ஒட்டி அகத்தி வளர்க்கலாம். காற்றை அது இன்னும் கொஞ்சம்  கட்டுப்படுத்தும். சில மாதங்களில் அதுவும் வருமானத்தை ஈட்டத் துவங்கும்.ஓரளவு காற்றைத் தடுக்கும் இது போன்ற மரங்களை வளர்க்கும் போதே, நீண்ட கால பலன் பலன் தரக்கூடிய நல்ல மர வகைகளையும் வளர்க்கத் துவங்கினால் காற்றிலிருந்து வாழைகளை காக்கும் போதே, எதிர்கால சந்ததிக்கு வளமான மரங்கள் உள்ள நிலங்களையும், அதன் மூலம் மாதம் மும்மாரி பொழியும் சூழலையும் கண்டிப்பாக உருவாக்க முடியும். சமூக சேவை என எங்கோ போய் மரம் நட வேண்டாம். வனக்கல்லூரியில் கிடைக்கும் மரங்களை, நமது நிலத்தில் நேரம் கிடைக்கும் போது நாமே வளர்க்கலாம். இந்த உணர்வு நம் விவசாயிக்கு வந்தால், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையும் விவசாயியால் இந்த நாடும் தன்னிறைவு அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுக்கெல்லாம் நேரம் இல்லீங்க என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. இடத்தை மட்டும் சொல்லுங்கள். எங்கள் தன்னார்வ  தொண்டர்கள் மூலம் அதை செய்யலாம். நம்  நாடு செழிக்க வேண்டுமென்று யாரோ ஒருவர் மட்டும் நினைத்தால் போதாது. நம் அனைவருக்கும் அந்த உணர்வு வர வேண்டும். அது வந்தால் இந்த விஷயங்கள் சுலபமாக நடக்கும்.

புதன், 30 ஏப்ரல், 2014

நித்யானந்தத்தின் சத்யாகிரகம்



நித்யானந்தத்தின் சத்யாகிரகம்                              
n.jpg
உறுதி மிக்க நூறு இளைஞர்களை தாருங்கள் நான் இந்த உலகத்தை
மாற்றி காட்டுகிறேன் - விவேகானந்தர்.
விவேகானந்தர் கூறிய அந்த இளைஞர்கள் அப்போது அவருக்கு
கிடைக்கவில்லை. இப்போது            
அவர் இருந்தால் அந்த நூறு பேருக்கு பதிலாக இந்த ஒரு
இளைஞனை தேர்ந்தெடுத்திருப்பார்.
அவர் நித்யானந்தம்.

கோவையின் நெரிசலில் இருந்து விலகி அவிநாசி சாலையில்
இருபது கி. மீ பயணத்தில் இருக்கிறது மயிலம் பட்டி.
தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியை கடந்து சென்றால் ஊருக்கு
ஒதுக்குபுறமாக உள்ளது அந்த இடம்.
சாலை விரிவாக்கம் மற்றும் நகரமயமாதலின் விளைவு மரங்கள்
வெட்டி வேரோடு சாய்க்கப்படுவதுமிகச்சாதாரணமாக இருக்கிறது.
அது இவருக்கு மிக ரணமாக இருக்கிறது.
அன்று இருபது வயதை எட்டாத அந்த இளைஞ்னுக்கு ஏற்பட்ட தாக்கம்
இன்று முன்னாள் குடியரசுத்தலைவர்
உயர்திரு. டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் கனவுதிட்டமான
"பசுமை பஞ்சாயத்து" எனும் அற்புதமான திட்டத்தின் முன்னோடியாக
விளங்குகிறார் நித்யானந்தம்.


நமது "வளரும் தமிழகம்" இதழுக்காக சந்திக்க சென்றபோது
மயிலம்பட்டியின் ஊரின் துவக்கத்திலேயே
நம்மை வரவேற்று அழைத்துச்சென்றார். குடியிருப்புகளை தாண்டி
இருந்தது அந்த இடம்.
நா விலும் அமெரிக்காவிலும் போய் பேசியது இவராஎன
வியக்குமளவிற்கு எளிமையாக இருந்தார்.
" மழையில்ல ஊரே வறண்டு போச்சுன்னு பொலம்பாம இந்த
மண்ணுக்கு நம்மால முடிஞ்சத செஞ்சா
நாமளும் நல்லாருப்போம் இந்த ஊரும் நல்லாருக்கும்" என
கொங்கு தமிழில் வெள்ளந்தியாக பேசுகிறார்.
இந்திய இளைஞ்ர்களின் பிரதிநிதியாக நாவும் அமெரிக்காவும்
இவரை அழைத்து அங்கு பேச சொல்லும் வரை
இவரின் சாதனைகள் வெளி உலகிற்கு பெரிய அளவில்
தெரியவில்லை. 25 வருடங்களாக சத்தமில்லாமல் இவர்
செய்த சேவைகள் உள்ளூர் மக்கள் கண்டுகொள்ளாவிட்டாலும் இவரின்
நலன் விரும்பிகளால் அயல் நாடுகளுக்கு தெரிந்தது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்து பத்தாவது வரை படித்த இவர் LMW
நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தாலும் சமூக சேவை
ஆர்வம் மட்டும் தீயாக அடி மனதில் எரிந்து கொண்டிருந்தது.
நண்பர்கள் சிலர் உதவியுடன் " தியானா பொது சேவை மையம்"
என்ற என்ற பெயரில் 1988ல் துவக்கி எய்ட்ஸ் விழிப்புணர்வு
பிரச்சாரத்தை கோவையின் சுற்று வட்டார கிராமங்களில் துவங்கினார்.
மனைவியின் நகைகளை அடகு வைத்தும் விற்றும் போதாக்குறைக்கு
கடன் வாங்கியும் இதை நடத்தினார்.

இவரின் தீவிர ஈடுபாட்டை அறிந்த கோவை மாவட்ட ஆட்சியாளர்
திரு. முருகானந்தம் அவர்கள் பாராட்டி கௌரவித்ததுடன் 
சான்றிதழும் வழங்கினார். இன்னும் அதிக உத்வேகத்துடன் தொடர்ந்த
சமூகப்பணியால் அதிகமான விடுப்பு எடுக்க நேர்ந்தது.
இவர் பணியாற்றிய LMW நிர்வாகம் இவருக்கு மெமோ
கொடுததோடல்லாமல்  பணி நீக்கம் செய்தது. ஆனாலும் தளராமல்
LMW சேர்மேன் திரு. சஞ்சய்  ஜெயவர்ததன வேலுவை  சந்தித்து
தன்னுடைய சமூக சேவை ஆர்வத்தை ஆவணங்களுடன் விளக்கினார்.
அதையெல்லாம்  பார்த்த அவர் " உன் சமூக சேவையை
தொடர்ந்து செய். உன் சம்பளம் வீடு தேடி வரும் " என்று கூறியதுடன்
இன்று வரை ஆதரவளித்து வருகிறார். இதை நம்மிடம்
சொல்லும்போதே அவரின் கண்கள் பனிக்கிறது.
பசுமை பஞ்சாயத்து எனும் உன்னதமான திட்டத்தை துவங்கிவைத்த
உயர்திரு. டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் கோவை வந்த
போது இவரின் சேவையை பாராட்டியதுடன்  இவருக்கு உறுதுணையாக
இருந்து வரும் மனைவியயும் தந்தையின் பணிகளை
உடனுக்குடன் ஆவணப்படுத்தி அவரின் வேலைப்பழுவை குறைக்கும்
மகன்கள் இரட்டையர்களான ஜெகதீஷ்-ஜெகதீப் இருவரையும்
வெகுவாக பாராட்டினார்.
13 முறை சிறந்த இளைஞ்ருக்கான  விருதுகளை பல்வேறு
மாவட்ட ஆட்சிதலைவர்களிடம் பெற்றுள்ள நித்யானந்தம் சிறு வயது
முதலே மரம் வளர்ப்பதிலும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்திலும்
இன்று வரை முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார். 2013 டிசம்பரில்
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கன்யாகுமரியில்  பிரச்சாரத்தில்
ஈடுப்டப்போவதாக தெரிவித்தார்.
தன்னலமின்றி இவர் ஈடுபாட்டுடன் செய்யும் சேவைக்காக 2012ம் வருடம்
வாஷிங்டன்ல் நடந்த உலக எய்ட்ஸ் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக
இவரை பேச அழைத்தது INTERNATIONAL AIDS COMMITTEE.
அதன் பிறகு 2013ல் . நா சபையில் நடந்த உலக இளைஞர் மாநாட்டில்
 இந்தியாவின் பிரதிநிதியாக இவரை அழைத்தது.
அதன் பிறகே இந்தியாவில் எய்ட்ஸ் மற்றும் சுற்றுசூழல் குறித்த
 150க்கும் மேற்பட்ட மானாடுகளில் இவரை பேச அழைத்து
கௌரவப்படுத்தியது.
மேலும் சிறுதுளி, ராக் மற்றும் விஜயலட்சுமி அறக்கட்டளை போன்ற
தண்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கோவையில்
உள்ள குளங்களை தூர்வாரும் பணியில் தன்னை
ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
330 ஏக்கர் பரப்பலவிலான உக்கடம் பெரியகுளம் தற்போது உயர்த்தப்பட்ட
கரையுடன் ஆங்காங்கே சிறுசிறு தீவுகளுடன் பல்வேறு மரங்களுடன்
ரம்மியமாக காட்சியளிக்கிறது.
சமூக சேவையில் ஈடுபடுபவர்களை ஏதோ லாப நோக்கொடு
செயல்படுவதாக கருதும் சிலரால் இளைஞ்ர்கள்  இதில் ஈடுபடவே
பயப்படுகிறார்கள் என்று வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். மேலும்
" உலகத்தில பெரிய பணக்காரரா இருந்த பில் கேட்ஸ்ம் உயர்ந்த
பதவிலிருந்த பில் கிளிண்டனும் மன நிம்மதி தர்றது சமூக
சேவைதாண்னு சொல்லி இப்போ சமூக சேவை பண்றாங்க.
நெறய பேரு நேரமில்லைன்னு சொல்றாங்க " நாம ரோட்டுல
போகும்போது ஒரு ஆம்புலன்ஸ் போச்சுன்னா அந்த உயிர்
நல்லாயிருக்கணும்னு மனசார நெனச்சாலே போதும் நாம
தூய்மையாயிருவோம். நீங்க போய் அவங்களுக்கு உதவி
பண்ணலேன்னாலும் பரவாயில்ல. அந்த எண்ணம் இருந்தாலே
போதுங்க" என்றவர் மேலும் இளைஞ்ர்கள் பொது வாழ்க்கைக்கு
வரவே பயப்படராங்க. என் தெருவுல ரோடு போட்டா நான் போய்
பாக்கணும் மணல் சரியா இருக்கா ஜல்லி சரியா இருக்கான்னு
நானே போய் கேட்டா இதுல இவனுக்கு கமிஷன் இருக்குமோன்னு
சுத்தி இருக்கறவங்க பேசுவாங்க. நமக்கென் வம்புன்னு ஆர்வம்
இருக்கறவனும் ஒதுங்கி போயிருவான். அப்ப யாருதாங்க கேக்கறது.
இது நம்ம பணம்ங்க. இத பத்தி நம்ம ஜனங்களுக்கு இன்னும்
விழிப்புணர்வு வரணுங்க" என்று கோபமும் வருத்தமுமாக சொன்னவர்
மேலும் " ஏன் மரம் வேக்கறதுல ஆர்வம்னு நெறய பேர் கேக்கறாங்க.
20 வருசத்துக்கு முன்னால தண்ணிய காசு குடுத்து வாங்கணும்னு
சொன்னா சிரிப்பாங்க. ஆனா இப்போ?
பெருநகரங்களில ஆக்சிஜன் பார்லர் தொரக்கறாங்க.
ஒரு மணி நேரத்துக்கு அம்பது ரூபாயாம்.
நம்ம தலைமுறை பரவால்லிங்க அடுத்த தலைமுறை?
. நா. சபையோட அறிக்கையில தண்ணீர் மக்களோட உரிமைன்னு
இருக்கு. ஆனா நம்ம நாட்டில அத தேவைன்னு மாத்திட்டாங்க .
தேவைன்னா என்ன? தேவைப்படரவங்க காசு குடுத்து வாங்கிக்கலாம்.
உரிமைன்னா கண்டிப்பா அரசாங்கம் கொடுத்தாகணும்.
நாம எல்லாத்துக்கும் அரசாங்கத்தயே குத்தம் சொல்லாம நம்மால
முடிஞ்சத பண்ணுவோங்க. நம்ம முன்னோர்கள் நமக்கு நல்ல உலகத்த
தந்திட்டு போயிருக்காங்க. அட நாம சீரழிக்காமாயாவது அடுத்த
தலைமுறைக்கு கொடுப்போம். இயற்க்கை வளங்களை அழிக்க நமக்கு
எந்த உரிமையும் கெடயாதுங்க.  இத வேற யாராவது வந்து
மாத்துவாங்கன்னு நாம எப்படிங்க சும்மா இருக்க முடியும்.
என்று அனல் தெறிக்க பேசியவர் சற்று ஆசுவாசமாக
" பசுமை பஞ்சாயத்து மூலமா ஊராட்சில இருக்கற பொறம்போக்கு
நெலத்த அந்த ஊராட்சி மன்ற தலைவர் மூலமா குடுத்தா
மூணு மாசத்தில நெலத்த சரிப்படுத்தி குழியெடுத்து மரக்கண்னு நட்டு,
சொட்டு நீர் பாசனம் அமைத்து அந்த மரம் சுயமா தன்னை
பாத்துக்கரவரைக்கும் கூட இருந்துட்டு அடுத்த ஊராட்சிக்கு போறோம்
என்று முடித்தார்.
25 வருடங்களுக்கு  முன் ஒரு சிறு தீப்பொறியாய் இருந்த நித்யானந்தம்
சஞ்சய் ஜெயவர்ததன வேலுவால் தீப்பிழம்பாய் மாறி உலக
நாடுகளில் உரை நிகழ்த்தி பல்லாயிரக்கணக்கான இளைஞ்ர்களுக்கு
அவரின் பேச்சினால் அந்த தீயை பரவ வைத்த அவருடன்
பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பாரதியின்  'அக்கினி குஞ்சொன்று
கண்டேன்" எனும் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது.
அவரின் பேச்சில் தெரிந்த சமூக அக்கறை நிச்சயம் பல
இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும். இந்தியாவை மாற்றும்
சக்தி தென்னிந்தியாவில் இருந்து புறப்படும் என்ற விவேகானந்தரின்
வாக்கு உண்மையாகும் .